எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்!

93369862 2929064813819482 3617020482286518272 n 2
93369862 2929064813819482 3617020482286518272 n 2

மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 25ஆம் திகதி அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் 2021 கல்வியாண்டுக்கான முதல் தவணை விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னர் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் 15ஆம் திகதி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதா – இல்லையா என்பது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.