எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பீட பதவியொன்றுக்கு, பெண் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக, கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர், உயர் பதவியொன்றை பெண்ணொருவருக்கு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மாகாண சபைகளிலும், நாடாளுமன்றத்திலும் நியாயமான பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் திட்டத்தை தாம் நிறுத்தப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், கட்சியின் உயர் பீடத்தில் பெண்ணொருவருக்கு உயர் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என தாம் பரிந்துரை முன்வைத்ததாக, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.