வவுனியா தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த 4 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியது.
அதனடிப்படையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.