ஹிருணிகாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

பிரேமச்சந்திர 1
பிரேமச்சந்திர 1

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக பிரேமச்சந்திரவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஹிருணிகா மீது தாக்கல் செய்யப்பட்ட கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காகவே, அவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.