கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் விபத்து ;20 வயது இளைஞன் ஸ்தலத்தில் பலி!

71ad073d d16c 4055 87a9 9f8cb32c9a08
71ad073d d16c 4055 87a9 9f8cb32c9a08

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.

புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மோதியதில் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

கனரக இயந்திரத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 20 வயது குணராஜா ஜெனோயன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலியான இளைஞனின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் முன்னெடுத்த வருகின்றனர்.