புதுக்குடியிருப்பு பேருந்து தரிப்பிடத்தை இயக்கு நிலைக்கு கொண்டு வருமாறு மக்கள் கோரிக்கை

received 264869245104128
received 264869245104128

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற பேருந்து தரிப்பிட இயங்கு நிலைக்கு கொண்டு வருமாறு மக்கள் மற்றும் குறித்த பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்களை அமைத்து உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு பல ஆண்டு காலம் சென்றபோதும் இன்றுவரை குறித்த பகுதிக்கு பேருந்துகள் வந்து தரித்து செல்லாத நிலையில் பேருந்து நிலையம் வெறிச்சோடி சமூக சீர்கேடுகளுக்கு துணை போகின்ற ஒரு இடமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர் 

அதுமாத்திரமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து மாற்றுத்திறனாளிகள் ஆக இருக்கின்ற சிலர் குறித்த பகுதிகளில் வர்த்தக நிலையங்களை அமைத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு பேருந்து தரிப்பிடம் திறக்கப்பட்ட காலம் முதல் குறித்த பகுதியில் வர்த்தக நிலையங்களை அமைத்து குறித்த பேருந்து தரிப்பிடம் இயங்கு நிலைக்கு வராத காரணத்தினால் வர்த்தக நடவடிக்கைகள் தமக்கு சாதகமாக இல்லை எனவும் இதனால் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவாக குறித்த பேருந்து நிலையத்தை இயங்கு நிலைக்குக் கொண்டுவருவதனூடாக தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியாக அமையும் என்பதோடு பொதுமக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த கூடிய வகையில் அமையும். அத்தோடு குறித்த பேருந்து நிலைய வளாகத்தில் தற்போது சமூக விரோத செயற்பாடுகள் தான் கூடுதலாக இடம்பெறுவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயங்களை மிக விரைவில் கருத்தில் கொண்டு  பேருந்து நிலையத்தை இயங்கு நிலைக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.