யாழ்ப்பாணத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா!

big 165616 Coronavirus 1 1
big 165616 Coronavirus 1 1

யாழ்ப்பாணத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் கிளிநொச்சியையும் மற்றையவர் பதுளையையும் சேர்ந்தவர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற 29 பேரிடம் பரிசோதனை பெறப்பட்டது. அவர்களில் கிளிநொச்சியையும்,பதுளையையும் சேர்ந்தவர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 371 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.