இதுவரை 7 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

202008111334067441 Tamil News corona infection for 54 person in ariyalur district SECVPF
202008111334067441 Tamil News corona infection for 54 person in ariyalur district SECVPF

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 60 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 1,217 பேர் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை நேற்று (வெள்ளிக்கிழமை) பெற்றுக்கொண்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து 5 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இலங்கையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது