கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் 15 பேர் பலி

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாத்திரம் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்களில் 07 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கியவர்கள், என்பதுடன் மிகுதி 05 பேர் ஏற்கனவே இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களில் 04 பேர் சாரதிகள் என்பதுடன் 03 பேர் அவர்களுடன் உந்துருளியில் பயணித்தவர்கள் எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.