வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்சங்க நிர்வாகத்தெரிவு இன்று இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் லோகேஸ்வரன் தலமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பழைய கூட்ட அறிக்கை மற்றும் கணக்கறிக்கை சமர்ப்பிக்கபட்டு நிர்வாக சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது.
அதனடிப்படையில் சங்கத்தின் புதிய தலைவராக ஏற்கனவே தலைவராக பதவிவகித்த ரி.தயாபரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், செயலாளராக ரி.கோபிநாத், பொருளாராக லிங்காதரனும், உப செயலாளராக இ. சற்சொருபன், ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அத்துடன் நிர்வாகசபை உறுப்பினர்களாக ந.கபிலநாத், ரூபன், என். டன்சன்,எம். ஜீவகுமார், சபேசன்,ரி.யசோதரன்,ரி.ராஜ்குமார், எஸ்.புவீந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்