அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

download 5 7
download 5 7

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் ஆராயவிசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உதவி காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முஸ்லிம்கள் சரியா சட்டத்தையே பின்பற்றுவார்கள் நாட்டின் சட்டத்தை அல்ல என்று அசாத் சாலி தெரிவித்ததாக அவருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் சட்டங்களை மதிக்க மாட்டோம் என்று நான் கூறவில்லை. முஸ்லிம்களின் வாழ்வியலின் முதல் சட்டம் குர்ஆனும், காதிசும் தான் என்றே கூறியதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.