காவல் நிலையங்களுக்கு வெற்றிடமாக காணப்படும் பகுதிகளிற்கு பதவிகள் வழங்கப்பட்டு வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா தலைமை காவல் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வவுனியா தலைமை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் உப போக்குவரத்து காவல் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய றொஷான் சந்திரசேகர போக்குவரத்து தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு பெற்று இன்று (15) தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
போக்குவரத்து காவல்துறை பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய காமினி திஸாநாயக்க குருணாகல் பகுதிக்கு இடமாற்றம் பெற்று சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.