நேற்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 3,108 பேர் கைது

kaithu

நாடு முழுவதும் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 3,108 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,112 நபர்களும், 454 வாகன சாரதிகளும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.

அதேநேரம் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காக 469 நபர்களும், கலால் கட்டளைச் சட்டத்தை மீறியதற்காக 523 நபர்களும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.