உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோர் இருவேறு சிறைகளுக்கு !

kalmunai1
kalmunai1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 நபர்களும் வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய சந்தேக நபர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் கைதான குறித்த நபர்கள் 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. இதற்கமைய வழக்கு விசாரணை எதிர்வரும் டிசெம்பர் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் உள்ள கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.