சஹ்ரானின் குழுவுக்குள் ஊடுருவிய இந்திய உளவாளி மூலமே தகவல்கள் கசிந்தது

download 3 10
download 3 10

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் மூன்று தடவைகள் துல்லியமான தகவல்களை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சஹ்ரானின் குழுவிற்குள் ஊடுருவிய அபுஹின்ட் என்ற இந்திய உளவாளியே தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரித்தார் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அபுஹின்ட் தான் இந்தியாவுக்கான ஐஎஸ் அமைப்பின் தலைவர் என தெரிவித்தே சஹ்ரான் குழுவினருடன் தொடர்பை பேணியுள்ளார். அதன் மூலம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளார் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஏப்ரல் 4, 20 21 ம் திகதிகளில் தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளருக்கு அபுஹின்ட் மூலமாக எச்சரிக்கை தகவல் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த சஹ்ரான் ஹாசிமின் மனைவி, சஹ்ரான் ஹாசிம், அபுஹின்ட் இந்தியாவுக்கான ஐஎஸ் அமைப்பின் பிரதிநிதி என கருதினார் என தெரிவித்துள்ளார்.

அவரும் அவரது சகோதரரும் அபுஹின்டுடன் இணையம் மூலமாக தொடர்ச்சியாக தொடர்பிலிருந்ததாக சஹ்ரான் ஹாசிம் தெரிவித்தார் எனவும் அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.