பிரியங்கவிற்கு இராணுவத்தில் பணிப்பாளர் பதவி!!

priyanga fernando
priyanga fernando

இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நேற்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, முன்னதாக ரணவிரு சம்பத் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.

இதேவேளை 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்திய குற்றத்துக்கு இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு 2500 ஸ்ரேலிங்க் பவுண்ட் தண்டம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்திருந்தது.