வவுனியா கச்சேரியில் மோப்பநாய் சகிதம் கடும் சோதனை

IMG20210316142058 01 1
IMG20210316142058 01 1

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர்தின நிகழ்வு இன்றையதினம் இடம்பெறவுள்ளது. மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 3 மணிக்கு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்விற்கு வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம், சாள்ஸ் மற்றும் பலர் விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விழா இடம்பெறவுள்ள மண்டபத்தில் விசேட அதிரடி படையினரால் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மோப்பநாய் சகிதம் காவல்துறையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.