வவுனியா மாவட்டசெயலகத்தின் ஏற்பாட்டில் மகளீர் தின விழா

DSC07170
DSC07170

“நாடும்தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்டசெயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர்தின விழா இன்று (16) இடம்பெற்றது.

அரசஅதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம். சாள்ஸ் கலந்து கொண்டார்.

முன்னதாக விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்த பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பெண்கள் தொடர்பான ஆவணகாணொளி ஒன்றும் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது.

ஒரு வங்கி ஒரு கிராமம் என்ற ரீதியிலாக தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு ஒவ்வொரு வங்கிகளும் கடன் திட்டங்களை ஏற்படுத்தி பெண்களின் வருமானத்தினை பெருக்கும் செயற்றிட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விசேடமாக பெண்ணாக இருந்து உயர்நிலையை அடைந்த வடக்குமாகாண ஆளுனர் எம். சாள்ஸ் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், சுலோசனா(காணி),கணக்காளர் பாலகுமார், பிரதேச செயலாளர்களான நா.கமலதாசன், இ.பிரதாபன், உதவிமாவட்ட செயலாளர் சபர்ஜா, மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், காவல்துறையினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.