களுவாஞ்சிகுடியில் கிணற்றில் விழுந்த சிறுமி மரணம்

download 13 1
download 13 1

களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் விழுந்த நிலையில், இரண்டரை வயது சிறுமியொருவர் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேற்றாத்தீவு பாலமுருகன் வீதியைச் சேர்ந்த முன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில், இரண்டாவது பிள்ளையான உதயராஜ் ஹம்சவர்த்தினியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (16.03.2021) செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் வழமை போல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தனது விளையாட்டுப்பொருள் கிணற்றில் விழ்ந்ததனைகண்டு அதனை தான் எடுக்க முற்பட்டபோது தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளார்.

கிணற்றில் வீழ்ந்துள்ளதாக அறிந்து கொண்ட குறித்த சிறுமியின் தகப்பனார் கிணற்றிலிருந்து மீட்ட சிறுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சையழிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.