யுவதியின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட இருவர் கைது

kaithu

மட்டக்களப்பு காத்தான்குடியில் சாப்பாடு வாங்கச் சென்ற யுவதி ஒருவரை காதலிப்பதாக நடித்து அவரை வற்புறுத்தி மோட்டர்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பூட்டி வைத்து நண்பனுடன் இணைந்து யுவதியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பியோடிய கொள்ளையர்கள் இருவரை நேற்று (16) கைது செய்துள்ளதுடன் கொள்ளையடித்த சங்கிலியையும் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காவல்துறை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்பெக்டர் முகமட் தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கையடக்க தொலைபேசி ஜ.எம்.ஓ ஊடாக கொள்ளையர்களின் படங்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ததுடன் கொள்ளையிட்ட தங்கச் சங்கிலி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள் ஒன்று இரு கையடக்க தொலைபேசிகளை மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கூளாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.