அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் விசாரணை

download 15 1
download 15 1

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நேற்று மாலை கொள்ளுப்பிட்டியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை பயங்கரவாத தடுப்புச்சட்த்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரியிருந்த நிலையில், இன்று நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.