நாளை பங்களாதேஷ் செல்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச

mahinda
mahinda

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாளை பங்களாதேஷிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர் பதவிக்கு வந்த பின் தனது இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

அந்த வகையில் பங்களாதேஷ் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு செல்கின்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என கூறப்படுகின்றது.

மேலும் இந்த விஜயத்தின்போது அவர் பங்களாதேஷ் நாட்டின் அரச பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.