நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை தலையில் தாக்கியதுடன், வயிற்றில் உதைத்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் கணவரை திரப்பனை காவல் நிலையத்தினர் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதலினால் கருவில் உள்ள சிசுவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை காவல்துறை கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகிறது.