தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம்

வைத்திய சேவை யாப்பை தங்களது பங்களிப்பு இன்றி திருத்தம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்பது தொடர்பில் அடுத்தவாரம் தீர்மானிகப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள பொது குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொழிற்சங்க நடவடிக்கையை எப்போது, எவ்வாறான முறையில் முன்னெடுப்பது என்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.