கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி விலகியுள்ளதாக அறிவிப்பு

download 1 23
download 1 23

கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில்  வவுனியா தெற்கு தமிழ் பி்ரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ் தேசியகூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. 

அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சிகாலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதற்கமைய தவிசாளர் பதவியை பிளட்டுக்கு வழங்கும் நோக்குடன் வவுனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராயசிங்கம் தனது பதவியை கடந்தவாரமளவில் ராஜினாமா செய்திருந்தார்.

இதேவேளை இரண்டு தினங்களின் பின்னர்  முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புளட்டை சேர்ந்த தவிசாளர் பதவி விலகல் முடிவினை எடுக்கவில்லை என தெரிவித்து தனது ராஜினாமா முடிவினை மீளப்பெற்றுக்கொண்டார். 

இந்நிலையில் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதவி விலகல் கடிதத்தை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாக செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக அந்த கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் சந்திரகுலசிங்கம் மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மீண்டும் பதவி விலகல் கடிதத்தை சமர்பிப்பார் என்று எதிர்பார்ககப்படுகின்றது.