உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பை பெறத் தவறிய மாணவர்களுக்கு தொழிநுட்பவியல் சார்ந்த பட்டம் ஒன்றை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.