ராகலை – மாகுடுகலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த 14 நாட்களாக முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ராகலை – மாகுடுகலை மற்றும் கிளன்டவன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த 20 வருடங்களாக மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலை வளாகத்தில் வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தேயிலைத் தோட்டங்கள் காடாகி விலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், தோட்டங்களை துப்பரவு செய்து தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெற்றது.
தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை தமது பணிப்புறக்கணிப்பு தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.