பதுளை – பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், பேருந்து சாரதி உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 9 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, 13ஆம் கட்டைப் பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.