பசறையில் விபத்து; பெண் பலி

1604153940 death 2
1604153940 death 2

பசறை – தொழும்புவத்தை – 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பசறையிலிருந்து படல்கும்புர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர் திசையில் வந்த சிறிய ரக பாரவூர்தியுடன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும்அதில் பெண் ஒருவர் பலியானதுடன்மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை காவல் நிலையத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்