பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்

colombo
colombo

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் ஏற்பட்டில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை நிர்ணயித்து தொழில் ஆணையாளரினால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து பெருந்தோட்டக் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்ககல் செய்திருந்தன.

இந்நிலையில் ஆயிரம் ரூபாவை வழங்காதிருப்பதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் முன்னெடுக்கும் முயற்சிகளை கண்டித்து நேற்று நீதிமன்றத்துக்கு அருகில் அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.