சிங்கராஜ வன அழிப்பு குறித்து ஆராய்வோம் என்கிறார் சமல் ராஜபக்ஸ

1606374094
1606374094

சிங்கராஜ வன அழிப்பு குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில், ஆராய வேண்டும் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.

சிங்கராஜ வனப்பகுதியில் இரண்டு குளங்களை அமைத்து, அதன் ஊடாக ஹம்பாந்தோட்டைக்கு நீரை விநியோகம் செய்யவுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்படி, குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் சமல் ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டார்.