காவல்து​றை உத்தியோகத்தர் பதவிக்கான நேர்முகத்தேர்வு!

IMG 20210323 112046
IMG 20210323 112046

வவுனியாவில் காவல்து​றை உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணபித்தவர்களிற்கான நேர்முகத்தேர்வு இன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் காவல்து​றை உயர் அதிகாரிகள் மற்றும் 250ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நேர்முகத்தேர்வுகள் கொரோனா பரவலையடுத்து கட்டம் கட்டமாக இடம்பெற்றுவரும் நிலையில் புதிய விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரையில் தமது விண்ணப்பங்களை சமர்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.