வவுனியாவில் காவல்துறை உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணபித்தவர்களிற்கான நேர்முகத்தேர்வு இன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் 250ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நேர்முகத்தேர்வுகள் கொரோனா பரவலையடுத்து கட்டம் கட்டமாக இடம்பெற்றுவரும் நிலையில் புதிய விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரையில் தமது விண்ணப்பங்களை சமர்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.