முல்லையில் இடம்பெற்ற வங்கிகளின் சேவை நிகழ்சித்திட்டம்!

sss 7
sss 7

முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரின் ஏற்பாட்டில் வங்கிகளின் சேவை , வங்கிகளுடனான நேரடி சந்திப்பு நிகழ்ச்சித் திட்டம் இன்று(23) கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் காலை 09.30மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் தொழில் முயற்சியாளர்களுக்குரிய வங்கிக் கணக்கினை ஆரம்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள், குறைந்த வட்டி வீத கடன்கள், வங்கிக் கடனைப் பெறுவதற்கான வழிகாட்டல்களும் வாய்ப்புக்களும், கீரிப் மற்றும் பிணையாளர் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள், குழுக் கடன் பெறுவதற்கான வழிகாட்டல்கள் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், வங்கிகளின் முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.