தேங்காய் எண்ணெயை பரிசோதிக்க நடவடிக்கை!

th 1
th 1

நாடளாவிய ரீதியாக வர்த்தக நிலையங்களில் உள்ள தேங்காய் எண்ணெயை பரிசோதிக்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாவதாக நுகர்வோர் நடவடிக்கைகள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த அதிகார சபையின் தவிசாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் சாந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத  தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் இது தொடர்பிலான பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக நுகர்வோர் நடவடிக்கைகள் தொடர்பான அதிகார சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத  தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய்களை மீள் ஏற்றுமதி செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.