யாழ்.வைத்தியசாலையில் புற்றுநோயை கண்டறியும் நிலையம் திறப்பு

vikatan 2019 05 ad9fb62e 193f 42a9 af72 d523ffae71ce 119415 thumb
vikatan 2019 05 ad9fb62e 193f 42a9 af72 d523ffae71ce 119415 thumb

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே புற்று நோயை  கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில்  இன்று காலைதிறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தினை தேசிய புற்றுநோய் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர்  ஜானகி விதான பத்திரன திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.