வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

coronavirus disease covid 19 infection medical with magnifying glass covid 19 typography new official name coronavirus disease named covid 19 coronavirus screening concept vector 4974 142 3
coronavirus disease covid 19 infection medical with magnifying glass covid 19 typography new official name coronavirus disease named covid 19 coronavirus screening concept vector 4974 142 3

வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாண பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 284 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது 44 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மண்டைதீவுக்கு கடலுணவு வாங்குவதற்காகச் சென்றவர்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் 3 கைதிகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மருத்துவ பீட மாணவன் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் புதுக்குடியிருப்பிலும் இருவர் மல்லாவியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

கிளிநொச்சி பளையில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

வவுனியா பொது வைத்தியசாலையில் இரண்டு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் ” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.