வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை வவுனியா காவல்துறையினர் இன்று (24) கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட காவல்துறையினர் இளைஞர் ஒருவரின் பயண பொதியினை சோதனையிட்டனர்.
இதன்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ600 கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியாவை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.