நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

1616652540 dead 2
1616652540 dead 2

தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை காவல்துறையினர் மீட்டனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.