ஹப்புத்தளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா

realistic coronavirus background 52683 35109
realistic coronavirus background 52683 35109

ஹப்புத்தளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 4 பெண்கள் அடங்குவதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய அவர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், பண்டாரவளை வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

தொற்றுறுதியானவர்கள் அனைவரும் காகொல்ல மற்றும் தியத்தலாவை கொவிட் 19 சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.