வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி ஒன்றை இனந்தெரியாத நபர் திருடி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக நேற்று (25) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா புதிய பேருந்து நிலையம் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக நேற்று மாலை இளைஞன் ஒருவர் துவிச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் இரவு 10.30 மணியளவில் திரும்பிய சமயத்தில் துவிச்சக்கரவண்டி களவாடப்பட்டுள்ளது.
இன்று காலை வவுனியா காவல்துறையில் குறித்த இளைஞனால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் காணப்படும் சீ.சி.ரீ.வியின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.