தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் சமாதானத்திற்கான இளைஞர்களின் ஆற்றுகை ஊடாக தயாரிக்கப்பட்ட எழுந்திடு குறுந்திரைப்படம் மன்னார் ஆகாஷ் விருந்தினர் விடுதியில் இன்று(25) காலை 9 மணி அளவில் தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு யசோதரன் அவர்களின் தலைமையில் எழுந்திடு குறுந்திரைப்பட வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் ,நானாட்டான் மன்னார் முசலி பிரதேச செயலாளர்கள் விருந்தினராக கலந்து கொண்டு எழுந்திடு எனும் இளைஞர்கள் உருவாக்கிய சம காலத்திற்கு தேவையான விழிப்புணர்வு குறுந்திரைப்படத்தை வெளியீடு செய்து வைத்தார்கள்.
நிகழ்வின் இறுதியில் மதங்களை புரிந்து கொள்ளுதல், முரண்பாட்டை தவிர்த்தல், பால்நிலை தொடர்பான மூன்று மாத பயிற்சிகளை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது