கஞ்சாவுடன் கைதான சிறைச்சாலை அதிகாரியின் பணி இடைநிறுத்தம்!

kaithu

கஞ்சா போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரியொருவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிகாரியின் வசமிருந்து 1510 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளை அபாயகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியொருவரும் சந்தேகநபர் ஒருவரும் வெலிசர மார்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொறுப்பாக வைத்தியசாலையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அதிகாரியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தினால் குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு அவ்வதிகாரியின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி அதிகாரியை இன்று (25) மாளிகாகந்தை நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.