வானிலையில் திடீர் மாற்றம்!

rain 23 1568876827 1
rain 23 1568876827 1

நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.