முல்லைத்தீவு துணுக்காய் அம்பலப் பெருமாள் குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மல்லாவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கோட்டை கட்டிய குளம் அம்பலப் பெருமாள் குளம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வயோதிப தம்பதியினரை பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அம்பலப் பெருமாள்குளம் காட்டுப்பகுதியில் வைத்து சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மல்லாவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.