கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

corona vaccine
corona vaccine

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 44 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் ஐந்தாயிரத்து 972 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து நன்கொடையாக 5 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதையடுத்து ஜனவரி 29ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.