பளை – இத்தாவில் விபத்தில் உயிரிழந்தார்கள் 9,12 வயதுடைய சிறார்கள்!

71e9f4ed e335 484a 9bd9 4784ff1613fa
71e9f4ed e335 484a 9bd9 4784ff1613fa

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பளையின் இத்தாவில் பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில் கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்திருக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.