நாட்டில் நேற்றைய நாளில், 14 ஆயிரத்து 455 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் தொடர்பான சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் நாளாந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்து 164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.