கொழும்பில் போதைப்பொருட்களுடன் பலர் கைது

kaithu

கொழும்பு குற்றவியல் பிரிவின் ஊழல் ஒழிப்பு பிரிவு ஊடாக நேற்றைய தினம் பேலியகொடை பட்டிய சந்தியில் வைத்து 142 கிராம் ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, முகத்துவாரம் பிரதேசத்தில் 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் இதுபோன்ற திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.