மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கால்போத்தல்கள் கொண்ட 100 மதுபான போத்தல், மதுபானங்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதை பொருள் மற்றும் சுற்றுச் சூழல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான நேற்று குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை காவல்துறையினர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.