மஹரகம ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் லொறி சாரதியை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தரவுக்கமைய அவர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.